பதிவு செய்த நாள்
09
ஏப்
2014
02:04
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், வசந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று ராமநவமி உற்சவம் கொண்டாடப்பட்டது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் கடந்த, 31ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. தினமும் மாலை, 6.30 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மனுக்கு, பத்து அர்ச்சகர்கள் சேர்ந்து, தொடர் குங்கும லட்சார்ச்சனை நடத்தி வருகின்றனர். மேலும், 16 வகையான உபச்சாரங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தினமும், கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நவராத்திரி லட்சார்ச்சனை விழாவை தொடர்ந்து, நேற்று, ராமநவமி கொண்டாடப்பட்டது. காலை, 8 மணிக்கு, 108 மூலிகைகளால் லலிதா சகஸ்ரநாம ஹோமம் சிறப்புடன் நடந்தது. இன்று, விழா நிறைவு பெறுகிறது. விழாவில், லட்சார்ச்சனை செய்யப்பட்ட குங்குமம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நிறைவு நாளன்று சுகவனேஸ்வரர், மகாநந்தீசுவரர், அதிகார நந்தீசுவரர், நிருத கணபதி, தட்சிணாமூர்த்தி, வலம்புரி கணபதி, ஐயப்பன், கங்காள மூர்த்தி, சரஸ்வதி, கஜலட்சுமி, ஆஞ்சநேயர், சூரியன், பைரவர் ஆகிய சன்னதிகளுக்கு, வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது. இன்று இரவு, 8 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது.