வால்பாறை: வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் தமிழ்புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. தமிழ்புத்தாண்டு தினமான நேற்று வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 5.00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும், 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தன. ராஜ அலங்காரத்தில் முருகன் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.