மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விஹு கனி நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2014 05:04
மணவாளக்குறிச்சி: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று விஹு கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நேற்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு காய், கனி மற்றும் நகைகள் கண்ணாடிக்கு முன்பாக படைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு இருந்து. தொடர்ந்து பஞ்சாபிஷேகமும், தீபாராதனையும், மதியம் உச்சபூஜையும், அன்னதானமும் நடந்தது. மாலையில் சிறப்பு பூஜையும், நடந்தது.