அரக்கோணம்: தர்மராஜா கோவில் மைதானத்தில் உலக ஒற்றுமை மற்றும் மழை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. அரக்கோணம் பெரியபாளையத்தம்மன் கோவிலில் பால்குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு திரவுபதி அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மழை வேண்டி வழிபட்டனர்.