பதிவு செய்த நாள்
19
ஏப்
2014
10:04
பொதட்டூர்பேட்டை;சித்திரை வெயிலில், அம்மனை குளிர்விக்கும் விதமாக, நேற்று அம்மனுக்கு, எலுமிச்சை மாலை சாற்றி பெண்கள் வழிபட்டனர்.பொதட்டூர்பேட்டை ஏரிக்கரையில் உள்ளது, ஆராட்டு அம்மன் கோவில்.சித்திரையில் அம்மனை குளிர்விக்கும் விதமாக, அக்னி வசந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது.நேற்று, சித்திரை முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் பொடி அபிஷேகமும், எலுமிச்சை மாலையும் சாற்றப்பட்டது.ஆராட்டு அம்மனை தாலாட்டும் விதமாக, அம்மன் துதி பாடப்பட்டது. பலி பீடம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கதம்ப பொடி, மஞ்சள் தூவி, பக்தர்கள் வழிபட்டனர்.இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.