பேரூர் : ஆலாந்துறை அருகே முண்டந்துறையில், திரிசூலநாயகி அம்மன் கோவில் திருவிழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கொடிக்கட்டு நடத்தப்பட்டு, மாலை அம்மனுக்கு திருமஞ்சனம், இரவு, அம்மன் அழைப்பும் நடந்தது. சக்தி கரகம் புறப்படுதல் அன்னதானம் நடத்தப்பட்டு, மாலை, அபிஷேக பூஜை நடந்தது.