Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்களநாதசுவாமி கோயிலில் நாளை ... தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலுக்கு ஆபத்து: பாதுகாப்பு கேள்விக்குறி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 மே
2014
12:05

பழநி: பழநி முருகன் கோயிலுக்கு சில மாதங்களுக்கு முன் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. சமீபத்தில் சூட்கேஸ் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இப்படி ஆபத்து சூழலில் உள்ள கோயிலில், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பழநிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆண்டுதோறும் ரூ.120 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. ஆனாலும், பாதுகாப்பு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டிய, தனியார் செக்யூரிட்டிகள், தரிசனம், அபிஷேகம், வின்ச், ரோப்கார், போன்ற கட்டண டிக்கெட்களை வழங்கும் பணிகளை மட்டுமே செய்கின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் வரும்போதும், விழாக்களிலும் மட்டுமே மலைக்கோயில் படிப்பாதை, யானைப்பாதை, வின்ச், ரோப்கார் ஸ்டேஷன் போன்ற இடங்களில், போலீசார் பாதுகாப்பை பலப்படுத்துகின்றனர். மற்ற நாட்களில் பக்தர்களிடம் எந்தவிதமான, சோதனையும் செய்வதில்லை. கடந்த டிச., 6 ல், பழநிகோயிலுக்கு, போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில், ஆயக்குடியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் "சூட்கேஸ் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக, வதந்தி பரவியது. மதுரையிலிருந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் வந்து சோதனை செய்தபின், அதில் துணிகள் மட்டும் இருந்தன. தற்போது, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டுவெடிப்பு நடந்ததையடுத்து, பழநி கோயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மலைக்கோயில் படிப்பாதை, வெளிப்பிரகாரம், ரோப்கார் ஸ்டேஷன், யானைப்பாதை, வின்ச் ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில், பக்தர்களின், உடமைகளை சோதனையிட "மெட்டல் டிடெக்டர் அமைக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.மருதமலை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் ... மேலும்
 
temple news
கோவை; பங்குனி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சுண்டக்காமுத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar