வலது கை முற்றிலும் சுத்தமான செயல்களைச் செய்யவும், இடது கை உடல் கழிவை சுத்தம் செய்தல் போன்ற அசுத்தமான செயல்களைச் செய்யவும் பயன்படுகிறது. ஆனால், கோயிலுக்கு போனாலோ, பெரியவர்களை வணங்கினாலோ இரண்டு கைகளையும் கூப்பியே வணங்குகிறோம். மனிதனைப் பொறுத்தவரை வலதுகை உயர்ந்தது, இடது கை தாழ்ந்தது. ஆனால் இறைவனையும், மகான்களையும் பொறுத்தவரை உயர்ந்தோர், தாழ்ந்தோர் இல்லை என்பதே வணக்கத்தின் தத்துவம்.