பதிவு செய்த நாள்
13
மே
2014
03:05
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் வேல்முருகன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா, கடந்த, 10ம் தேதி துவங்கியது. விழாவின், முக்கிய நாளான, நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, காலை, 9 மணிக்கு, பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், மதியம், 12.30 மணிக்கு, ஸ்வாமிக்கு பாலாபிஷேகமும், மதியம், 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. இரவு, 9 மணிக்கு மேல், 10 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகன் கல்யாண வைபவம் நடக்கிறது. வரும், 15ம் தேதி காலை, 6 மணிக்கு, ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, செங்குந்தர் சிவநேய செல்வர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். முன்னதாக, மங்களாம்பிகை சமேத மகாலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மகாலிங்கேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கல்யாணம் உற்சவமும், ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.