சீர்காழியில் உள்ள திரிவிக்கிரமன் கோயிலில் ஒரு வித்தியாசமான வழிபாடு நடக்கிறது. வீடு கட்டும் முன்பு பக்தர்கள் மணல் வைத்து பூஜை செய்கின்றனர். மாவலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்ட பெருமாள் என்பதால் இவரிடம் நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர வேண்டிக்கொண்டால் அவை நிவர்த்தியடைவதாகவும், வாஸ்து தோஷங்கள் நீங்குவதாகவும் நம்பிக்கை.