சில கோயில்களில் வருடத்தின் சில நாட்களில் கருவறையில் சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழும். இதனை சூரிய பூஜை என்பர். நாகப்பட்டினம் மாவட்டம், திருநாங்கூர் பத்ரி நாராயணர் கோயிலில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நேரத்தில் சுவாமியை வேண்டிக்கொண்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.