சிவகங்கை: திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று சோம வார பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமாக பால், சந்தனம், தயிர், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், சொர்ணம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.