Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கமேஸ்வரர் கோவிலில் தூய்மை பணிகள் ... கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புது காளியம்மன் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுத்த பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 மே
2014
02:05

கரூர்: கரூர், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கரூர், மண்மங்கலம் புதுகாளியம்மன், புதுசங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் ஜூன், 2 தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று, அனுக்ஞை, தனபூஜை, ஆச்சார்யவரணம், ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி போன்றைவை நடந்தது. தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. கொடுமுடியில் இருந்து, வாகனம் மூலம் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. கரூர் முனியப்பன் கோவில் பிரிவு சாலையில் இருந்து, ஈரோடு சாலை, பஸ் ஸ்டாண்ட் வெங்கமேடு வழியாக, வாங்கபாளையம் வரை ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் அழைத்து வரப்பட்டன. இன்று அதிகாலை, 4 மணி முதல், 5 மணி வரை மகாகணபதி ஹோமம், நவக்ரஹஹோமம், பூர்ணாகுதி, 8.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, மாலை, 5.30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை காலை, 8.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, மாலை, 5.30 மணிக்கு நான்காம் கால பூஜை, இரவு, 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. ஜூன், 2ம் தேதி அதிகாலை, 3.30 மணிக்கு, ஐந்தாம் கால யாகசாலை பூஜை, அதிகாலை, 4 மணிக்கு ஹோமம் துவக்கம், ஸ்பர்சாகுதி, யாத்ராதானம், காலை, 6.45 மணிக்கு புதுகாளியம்மன், புது சங்கிலிகருப்பண்ணசாமி, புதுமாரியம்மன் ஸ்வாமி மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம், காலை, 7.20 மணிக்கு மஹா அபிஷேகம், காலை, 9.15 மணிக்கு மஹாதீபாராதனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் இன்று நடந்த பட்டினத்தார் சிவபூஜை  செய்யும் நிகழ்வில் திரளான ... மேலும்
 
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar