பதிவு செய்த நாள்
31
மே
2014
02:05
கரூர்: கரூர், மண்மங்கலம் புதுகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். கரூர், மண்மங்கலம் புதுகாளியம்மன், புதுசங்கிலி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் ஜூன், 2 தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று, அனுக்ஞை, தனபூஜை, ஆச்சார்யவரணம், ரக்ஷாபந்தனம், அங்குரார்பணம், வாஸ்துசாந்தி போன்றைவை நடந்தது. தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. கொடுமுடியில் இருந்து, வாகனம் மூலம் தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது. கரூர் முனியப்பன் கோவில் பிரிவு சாலையில் இருந்து, ஈரோடு சாலை, பஸ் ஸ்டாண்ட் வெங்கமேடு வழியாக, வாங்கபாளையம் வரை ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை, குதிரைகள் அழைத்து வரப்பட்டன. இன்று அதிகாலை, 4 மணி முதல், 5 மணி வரை மகாகணபதி ஹோமம், நவக்ரஹஹோமம், பூர்ணாகுதி, 8.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, மாலை, 5.30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை காலை, 8.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, மாலை, 5.30 மணிக்கு நான்காம் கால பூஜை, இரவு, 8 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. ஜூன், 2ம் தேதி அதிகாலை, 3.30 மணிக்கு, ஐந்தாம் கால யாகசாலை பூஜை, அதிகாலை, 4 மணிக்கு ஹோமம் துவக்கம், ஸ்பர்சாகுதி, யாத்ராதானம், காலை, 6.45 மணிக்கு புதுகாளியம்மன், புது சங்கிலிகருப்பண்ணசாமி, புதுமாரியம்மன் ஸ்வாமி மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் மகாகும்பாபிஷேகம், காலை, 7.20 மணிக்கு மஹா அபிஷேகம், காலை, 9.15 மணிக்கு மஹாதீபாராதனை நடக்கிறது.