Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ... பழையநெல்லூர் மகா சக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓமலூரில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
02:06

ஓமலூர்: ஓமலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலம், 3,000 ஏக்கர் உள்ளது. அந்த கோவில் நிலம் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஓமலூர் அருகே ஊ.மாரமங்கலம் சாமுண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, ஐந்து ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரப்பு செய்து, பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர், அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் மனு கொடுத்திருந்தார். அதையடுத்து, நேற்று முன்தினம், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, கோவில் ஆய்வாளர் கல்பனாதத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஓமலூர் ஊ.மாரமங்கலம் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள ஊ.மாரமங்கலம் மாரீஸ்வரர் கோவில், செம்மாண்டப்பட்டி, ஏனாதி சென்றாய பெருமாள் கோவில்களில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு கூறியதாவது: ஓமலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதையடுத்து, சம்பந்தப்பட்ட கோவில் நிலங்களை நேரில் பார்வையிட்டு, அதற்கான ஆவணங்களையும் வைத்து ஆய்வுப் பணியினை தொடங்கியுள்ளோம். முழுமையான ஆய்வுக்கு பின்னரே ஆக்கிரமிப்பு பற்றிய விவரங்கள் தெரியவரும். ஆய்வுக்கு பின்னர் தெரியவரும், ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar