Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ... பழையநெல்லூர் மகா சக்தி மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓமலூரில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2014
02:06

ஓமலூர்: ஓமலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து, இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலம், 3,000 ஏக்கர் உள்ளது. அந்த கோவில் நிலம் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஓமலூர் அருகே ஊ.மாரமங்கலம் சாமுண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, ஐந்து ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரப்பு செய்து, பிளாட் போட்டு விற்பனை செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர், அல்லிகுட்டை ராதாகிருஷ்ணன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் மனு கொடுத்திருந்தார். அதையடுத்து, நேற்று முன்தினம், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, கோவில் ஆய்வாளர் கல்பனாதத் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஓமலூர் ஊ.மாரமங்கலம் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதே பகுதியில் உள்ள ஊ.மாரமங்கலம் மாரீஸ்வரர் கோவில், செம்மாண்டப்பட்டி, ஏனாதி சென்றாய பெருமாள் கோவில்களில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு கூறியதாவது: ஓமலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதையடுத்து, சம்பந்தப்பட்ட கோவில் நிலங்களை நேரில் பார்வையிட்டு, அதற்கான ஆவணங்களையும் வைத்து ஆய்வுப் பணியினை தொடங்கியுள்ளோம். முழுமையான ஆய்வுக்கு பின்னரே ஆக்கிரமிப்பு பற்றிய விவரங்கள் தெரியவரும். ஆய்வுக்கு பின்னர் தெரியவரும், ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar