Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பக்தர்கள் 20 மணிநேரம் ... திரவுபதியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் ரசாயனம் கலக்காத இயற்கை காய்கறி தோட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2014
12:06

அன்னுார் : மொண்டிபாளையம் பெருமாள் கோவில் காய்கறி தோட்டத்தில் இயற்கை முறை விவசாயத்தில், அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. அன்னுார் அருகே ’மேலைத்திருப்பதி’ என்றழைக்கப்படும் மொண்டிபாளையம், வெங்கடேசப் பெருமாள் கோவிலில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 50 பேருக்கும், சனி, ஞாயிறுகளில் 100 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. நித்திய அன்னதான திட்டத்திற்கு தேவைப்படும் காய்கறிகளை, இடவசதியுள்ள கோவில்களில் தோட்டம் அமைத்து விளைவிக்க வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து மொண்டிபாளையத்தில் கோவில் அருகில் ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் 40 சென்ட் காலி இடத்தில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. பகுதி நேர பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தக்காளி, கீரை, வெண்டை, பாகற்காய், அவரை, தட்டை, முருங்கை, பூசணி, சுரைக்காய், கருவேப்பிலை ஆகியவை பயிரிடப்பட்டன. இவை அனைத்தும் இப்போது பயன் தரத்துவங்கியுள்ளன. அன்னதான திட்டத்திற்கு தேவையான காய்கறிகள் முழுக்க இப்போது இங்கிருந்து தரப்படுகிறது. கோவில் செயல் அலுவலர், பெரிய மருதுபாண்டியன் கூறுகையில், “இந்த தோட்டத்தில் ஒரு துளி கூட ரசாயன உரமோ, பூச்சி கொல்லி மருந்தோ பயன்படுத்தவில்லை. வேப்பம்புண்ணாக்கு, மண் புழு உரம், சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்கிறோம். வழக்கமான காய்களை விட கூடுதல் சுவை கிடைக்கிறது. அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. இப்போது ஒரு ரூபாய்க்கு கூட வெளியிலிருந்து காய்கறி வாங்குவதில்லை. இயற்கை முறையில் விளைந்த காய்கறியை உணவுக்கு பயன்படுத்துவதால், அன்னதானத்திற்கு வரவேற்பும் அதிகரித்துள்ளது,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar