தமிழ் தெய்வமான முருகனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் பழமொழிகள் பல உண்டு.
*சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை. *வடிவேல் அறிய வஞ்சகம் இல்லை. *சிந்தை நொந்தவனுக்குக் கந்தனே துணை *வழிக்குத் துணை வடிவேல் *கலிக்கும்(வறுமை) கிலிக்கும்(பயம்) கந்தனை எண்ணு *கேளற்றவர்க்கு வேள்(கேட்பாரற்றவனுக்கு கந்தனே துணை) * காக்க காக்க கனகவேல் காக்க இந்தப் பழமொழிகளின் அடிப்படையில் தான், நக்கீரர், நாளென் செயும் வினை தான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும் கொடுங்கூற்று என் செயும்- குமரேசர் இருதாளும் தப்பாமல் சார்வார் தமக்கே! - என நவக்கிரகங்கள், எமன், முன்வினை என எதனாலும் தன்னை நெருங்க முடியாது என சவால் விடுகிறார்.