Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சேரி கோவில்களில் மழைநீர் ... கதிர்வேல் சுவாமி கோவிலில் 108 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரி ஜெகநாதர் ரத யாத்திரை: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2014
02:06

புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையின் போது, பக்தர்கள், ரதத்தின் மீது ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் புரியில், பிரசித்தி பெற்ற ஜெக நாதர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும் நடக்கும் ரத யாத்திரை, மிகவும் பிரபலம். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், இந்த ரத யாத்திரையில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை, இம்மாதம், 29ல் துவங்குகிறது. யாத்திரையின்போது, பக்தர்கள் சிலர், ரதங்கள் மீது ஏறி, சாமி சிலைகளை தொடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீப காலமாக, இவ்வாறு ஏறும் பக்தர்கள் விபத்தில் சிக்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பக்தர்கள், ரதத்தின் மீது ஏறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. கோவில் பூசாரிகள், இதை ஏற்க மறுத்தனர். இந்த நடைமுறை, நீண்ட நாட்களாக பின்பற்றப்படுகிறது. இதில், கட்டுப்பாடு விதிக்க கூடாது என, வாதிட்டனர். இதையடுத்து, கோவில் நிர்வாகத்துடன், போலீசார் மற்றும் மாநில அரசு அதிகாரிகள், நேற்று பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஒடிசா மாநில சட்ட அமைச்சர் அருண் குமார் சாகு கூறுகையில், ரத யாத்திரையின் போது, பக்தர்கள், ரதத்தின் மீது ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ரதம், நிலைக்கு திரும்பியதும், பக்தர்கள் ரதத்தின் மீது ஏறலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 53 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar