நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் கட்டும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2026 10:02
சேத்தியாத்தோப்பு; கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் தேர் கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடலுார் மாவட்டம், கூடலையாற்றுார் வரலாற்று சிறப்பு மிக்க தலம். நால்வரில் சுந்தரருக்கு நேரடி காட்சி கொடுத்த சிவன்கோவில் என்ற பெரு மை இதற்கு உள்ளது. இந்த கோவிலில் கடந்த, 18 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடக்க உள்ளது. இதற்கான, தேர் கட்டும் பணிகளும், ரிஷப வாகனம், எலி வாகனம், சிம்ம வாகனம் சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோவிலில் வரும் 21 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் மாசி மகம் உற்சவ விழா துவங்குகிறது. அடுத்தடுத்த தினங்களில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளன. வரும் மார்ச் 1 ம் தேதி காலை நர்த்தனவல்லபேஸ்வரர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருத்தேரில் ஏற்றி கோவில் வாயிலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது. தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வர உள்ளது. அடுத்த நாள் மாசி மகத்தையொட்டி, சுவாமி வீதியுலா புறப்பட்டு, கூடையாற்றுார் வெள்ளாறு, மணிமுக்தாறு சங்கமிக்கும் திருவேணி சங்கமம் தீர்த்தவாரி நடைபெறுகிறது.