திண்டிவனம்: தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் முடிந்து இன்று தேரோட்டம் நடக்கிறது. திண்டிவனம் அடுத்த தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கடந்த 4 ம் தேதி காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார். 8 ம் தேதி கருடசேவையும், 10 ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடந்தது.