அவலூர்பேட்டை: கன்னலம் திரவுபதி அம்மன் கோவில் திடலில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம் கன்னலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 4 ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 20 ம்தேதி முதல் 10 நாள் வரையில் மகாபாரத சொற்பொழிவு, 12 நாள் நாடகம் நடந்தது. 3ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி , தினசரி அம்மன் வீதியுலா, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடந்தது 12 ம்தேதி பிற்பகலில் துரியோதனன் படுகளமும் மாலையில் தீமிதியும், இரவு தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகளும் நடந்தது.