புதுச்சேரி: வாதானுார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், வரும் 9ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வாதானுார், மீனாட்சி சுந்த÷ ரஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வரும் 9ம் தேதியன்று, காலை 9:00 மணியில் இருந்து, 10:30 மணிக்குள், மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முன்னதாக காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9:00 மணிக்கு சீர்வரிசை கொண்டு வருதலும் நடக்கிறது.அதைத்தொடர்ந்து, பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர்– மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில், இரவு வீதி உலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, தனி அதிகாரி ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.