பதிவு செய்த நாள்
11
ஜூலை
2014
02:07
பொன்னேரி : பொன்னேரி அடுத்த, சிவபுரம் கிராமத்தில் உள்ள, ஸ்ரீஷீரடி சிவபுரம் சாய் நாத மந்திரில், நாளை (12ம் தேதி) குரு பவுர்ணமி பூஜை நடைபெற உள்ளது. காலை 4:30 மணிக்கு, ஆரத்தியும், 5:00 மணிக்கு, கணபதி ஹோமமும், 7:00 மணிக்கு, பாலாபிஷேகமும், 9:00 மணிக்கு, தேர் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.மேலும், பிற்பகல், 3:00 மணிக்கு, சத்திய நாராயணன் பூஜையும், இரவு, 9:00 மணிக்கு, பாபா பவனி வருதலும் நடைபெற உள்ளது.