தொடர் இறப்பால் மக்கள் பீதி: பண்ருட்டியில் பரிகார பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2014 11:07
பண்ருட்டி: பண்ருட்டியில் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக இறப்பதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி 26வது வார்டு வி.ஆண்டிக்குப்பம் நந்தனார் காலனியில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 6 மாதத்திற்கு முன் அரிகிருஷ்ணன் (50) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவரைத் தொடர்ந்து பிரபாகரன் (20) மின்சாரம் தாக்கி இறந்தார். பிரபாகரன் இறந்த ஒரு மாதத்தில், மகன் இறந்த சோகத்தில் அவரது தந்தை தேசிங்கு (50) இறந்தார். இதேபோன்று கடந்த 6 மாதங்களில் 20 நாட்கள் முதல் 30 நாட்களுக்குள் 8 பேர் இறந்துள்ளனர். உயிரிழப்பு மற்றும் தற்கொலை முயற்சி, விபத்துகள் என அடிக்கடி நிகழ்வதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கலியமூர்த்தி மனைவி குமாரி என்பவர் சாமியாடி, இன்னும் நான்கு இளைஞர்களை காவு வாங்குவதற்குள் பரிகாரம் செய்யுங்கள் எனக் கூறியதால், மாலை 6:00 மணிக்கு பம்பை, உடுக்கை சகிதம் அம்மனுக்கு படையலிட்டு செய்து பொதுமக்கள் பரிகாரம் செய்தனர்.