பதிவு செய்த நாள்
12
ஜூலை
2014
11:07
பெங்களூரு: ஹலசூரு பஜார் தெரு, பான் பெருமாள் கோவில்- கிருஷ்ணா மந்திரில், நாளை ராமானுஜர் ஆயிரமாண்டையொட்டி, நான்காம் ஆண்டு ரத யாத்திரை, வைஷ்ணவ பாகவதர் கோஷ்டியினருடன் திருவீதி புறப்படுகிறது. ராமானுஜர் திவ்ய பாதத்துக்கு புஷ்ப யாகம் செய்யப்படுகிறது. ஹலசூரு பஜார் தெரு பான் பெருமாள் கோவில், 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இக்கோவிலில், மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அப்போது, ராமானுஜ நுாற்றந்தாதி, ராமானுஜர் த்வயம் நடக்கிறது. இதை தொடர்ந்து, ராமானுஜர் சஹஸ்ரநாமம் அர்ச்சனை, பாகவதர் ததியாராதனை பஜனையுடன் இதிர்ஜா விம்சதி நடக்கிறது. சித்திரை திருவாதிரைக்கு பின், ராமானுஜர் ஆயிரமாண்டையொட்டி, நான்காம் ஆண்டு ரதயாத்திரை விழா நடக்கிறது. ராமானுஜரின், ராமானுஜ நுாற்றந்தாதி ரதயாத்திரை புறப் படுகிறது. இந்தாண்டும் தென்திருப்பேரை அரவிந்தலோச்சனன் சுவாமிகளுடன், பாகவத ததியாராதனை நடக்கிறது.
வரும் 13ம் தேதி, ஹலசூரு ஜோகுபாளையம் மாநகராட்சி சமுதாய பவனில், தென்திருப்பேரை அரவிந்தலோச்சனன் சுவாமிகள் முன்னிலையில், ராமானுஜர் ஆயிரமாண்டையொட்டி, நான்காம் ஆண்டு ரதயாத்திரை, வைஷ்ணவ பாகவதர் கோஷ்டியினருடன் திருவீதி புறப்படுகிறது. ராமானுஜர் திவ்ய பாதத்துக்கு புஷ்ப யாகம் நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, கோவிலில் திருப்பாவை பாராயணம் நடக்கிறது. பின், சாத்துமுறை தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. 9:00 மணிக்கு, கோவிலிலிருந்து, ராமானுஜ நுாற்றந்தாதி பாராயணத்துடன் ஊர்வலம் புறப்படுகிறது. காலை 10:30 மணிக்கு, ஹலசூரு ஜோகுபாளையம் மாநகராட்சி சமுதாய பவனில் கூடி, சுவாமி ராமானுஜருக்கு, ராமானுஜ நுாற்றந்தாதி பாராயணத்துடன் புஷ்ப யாகம் நடக்கிறது. 11:30 மணிக்கு, தென்திருப்பேரை அரவிந்தலோச்சனன் சுவாமிகள், எம்பெருமான் தரிசனம் நடக்கிறது. பகல் 1:30 மணிக்கு, சாத்துமுறை, ஆரத்தி, தீர்த்த பிரசாதத்துக்கு பின், பகவத ததியாராதனை நடக்கிறது.