Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல்லகச்சேரி காலனியில் மாரியம்மன் ... மாரியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அளிஞ்சி மரக்குச்சிகள் விற்பனை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
12:07

ஈரோடு: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, அளிஞ்சி குச்சிகள் விற்பனை துவங்கி உள்ளது. ஆண்டுதோறும், ஆடி மாதத்துக்கு பின்னரே, ஒன்றன் பின் ஒன்றாக, பண்டிகை நாட்கள் அணிவகுப்பதாக, இந்துக்கள் கருதுகின்றனர். எனவே, ஆடி மாத பிறப்பை வரவேற்று கொண்டாடுவது வழக்கம். ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, வீடு, கடை, வர்த்தக நிறுவனங்களை சுத்தம் செய்வது, மாவிலை தோரணங்கள் கட்டுவது போன்றவற்றில் ஈடுபடுவர். ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு, ஆடி மாத பிறப்பன்று குடும்பத்துடன் சென்று நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆடி மாத பிறப்பன்று, விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனை "தேங்காய் சுடும் நோன்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, அளிஞ்சி மரக்குச்சிகள், நேற்று, ஈரோடு தினசரி மார்க்கெட் பகுதியில் விற்பனைக்கு வந்து இருந்தது. இதுகுறித்து குச்சிகள் விற்பனை செய்த கார்த்திகேயன் கூறியதாவது:

சேலம் மாவட்டம் வீரபாண்டி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் தான், அளிஞ்சி மரங்கள் அதிகளவில் உள்ளன. அங்கிருந்து தான், தேங்காய் சுடும் நோன்புக்காக, அளிஞ்சி மரக்குச்சிகளை கொண்டு வருகிறோம். ஈரோட்டில், பத்துக்கும் மேற்பட்டோர், ஆடி மாதத்துக்கு முதல் நாள் ஆண்டுதோறும் விற்பனை செய்கிறோம். பாரம்பரியத்தை கடைபிடிக்கும் சில குடும்பங்கள், அளிஞ்சி குச்சிகளை வாங்கி செல்கின்றனர். ஆனால், நாகரீகம் காரணமாக அளிஞ்சி மரக்குச்சி வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குச்சி ஜோடி, 20, 30 ரூபாய் என, இரு ரகங்களாக விற்று வருகிறோம். பிற குச்சிகளையும், சில வியாபாரிகள் அளிஞ்சி குச்சிகள் என்று விற்பனை செய்கின்றனர். காலையில், விற்பனை குறைவாகவே உள்ளது. மாலையில் விற்பனை சூடுபிடிக்கும், என்றார். இதேபோல், பல்வேறு சைஸ்களில், தேங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சைசுக்கு ஏற்ற விலையில் வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar