அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை , சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. வளத்தி சக்தி வேல் முருகன் கோவிலில் 13 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 20 ம் தேதி மாலையில் சக்தி கலச வழிபாடும், காப்பு கட்டுதலும் நடந்தது. 21ம் தேதி காலையில் விநாயகர் ஹோமம், பால் குடம் ஊர்வலம் நடந்தது. மாலையில் தீமிதித்தல், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. கன்னலம் வள்ளி, தெய்வானை சமேத செல்வமுருகனுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.