Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவலூர்பேட்டை ஆடி கிருத்திகை விழா! கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்றிரவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை: பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
02:07

சேலம்: சேலம் முருகன் கோவில்களில், நேற்று ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜையில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.சேலம், அம்மாப்பேட்டை குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. கோவிலின் செயல் அலுவலர் சுரேஷ்குமார், தக்கார் ஞானமணி, உற்சவ கமிட்டி தலைவர் சக்திவேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பால் அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. குமரகிரி மலை மேல் நடந்த அன்னதானத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆடிக்கிருத்திகை, 1,008 லிட்டர் பால் அபிஷேக விழாக் கமிட்டியர் செய்திருந்தனர்.சேலம், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மாலையில் ஓம்கார தீபமேற்று விழாவும், கூட்டு வழிபாடும் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஓம்கார தீப பாலாபிஷேக, 22ம் ஆண்டு விழாக்குழுவினர் செய்திருந்தனர். சேலம் கந்தாஸ்ரமத்தில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, ஸ்கந்தருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம் செவ்வாய்ப்பேட்டை சித்திரைச் சாவடி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, நேற்று காலை, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, பால் அபிஷேகம், பால் குட ஊர்வலம் ஆகியவை நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர். சேலம், ஊத்துமலை முருகன் கோவில், ஃபேர்லேன்ட்ஸ் முருகன் கோவில் உள்ளிட்ட சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஹோமம், அன்னதானம் ஆகியன நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar