Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழா ... வேலாயுதம்பாளையம் ஆடிக்கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல்ஆடி கிருத்திகை முருகன் கோவிலில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2014
02:07

நாமக்கல்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.நாமக்கல்-மோகனூர் சாலை பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆடி கிருத்திகை மகாயாகம் மற்றும் 108 சங்கு அபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு சுப்ரமணியர், ஷடாஷர ஹோமம் நடந்தது.காலை, 10 மணிக்கு பூர்ணாகுதி, சோடசோபசார பூஜை, 11 மணிக்கு, 108 மகா சங்கு அபிஷேகம், 12 மணிக்கு, மகா தீபாராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6 மணிக்கு பாலதண்டாயுதபாணி ஸ்வாமிக்கு சிறப்பு முத்தங்கி, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மோகனூர், காந்தமலை பாலதண்டாயுதபாணி கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, காலை முதல் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மதியம், 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை, 5 மணிக்கு ராஜ அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 7 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.அதேபோல், காளிப்பட்டி கந்தசாமி கோவில், கபிலர்மலை பாலசுப்ரமணியர் கோவில், கூலிப்பட்டி முருகன் கோவில், சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில், பேளுக்குறிச்சி பழனியப்பர் கோவில், ராசிபுரம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ஆறுமுக சுப்ரமணியர் கோவில், திருச்செங்கோடு செங்குட்டுவர் கோவில் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 பெண்ணாடம்,: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் புதிய அம்மன் தேர் திருப்பணி முடிந்து, வெள்ளோட்டம் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
திருப்பதி: ஸ்ரீ பத்மாவதி மற்றும் ஸ்ரீ சீனிவாசர் ஆகியோரின் திருக்கல்யாண உற்சவங்கள் (பரிணய உற்சவங்கள்) ... மேலும்
 
temple news
காத்மாண்டு, நேபாளம், காத்மாண்டுவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பழமையான நகரமான மத்யபூர் திமியில் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுாரில் பழைமை வாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar