Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளையார்கோவில் ஆடி சுவாதி குருபூஜை ... தஞ்சை நவநீத கிருஷ்ணன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளிப் பல்லக்கில் 20–ந்தேதி புதுப்பள்ளியறைக்கு சுவாமி செல்கிறார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2014
12:08

ராமேசுவரம் கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கும் போது பள்ளியறையில் இருந்தும் அதுபோல் இரவு 8 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்பும் யானை தந்தத்தால் ஆன பல்லக்கில் சுவாமி வலம் வந்து பள்ளியறைக்குச் செல்வதும் வழக்கம். ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் ஒருநாள் மட்டும் சுவாமி வெள்ளி பல்லக்கில் வலம் வந்து புதுப்பள்ளியறைக்கு செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.வெள்ளிப் பல்லக்கில் சுவாமி புதுப்பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சி ஆடித் திருக்கல்யாண விழாவில் சுவாமி– அம்பாளுக்கு திருக்கல்யாணம் முடிந்த பின்பு நடைபெறும் ஒன்றாகும். இந்த ஆண்டு கோவில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 1–ந் தேதி அன்று ராமநாதசுவாமி– பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.புதுப்பள்ளியறைக்கு செல்லும் நிகழ்ச்சிஇதைத்தொடர்ந்து புதுப்பள்ளியறை பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. ராமேசுவரம் கோவிலில் வருகிற 20–ந் தேதி (புதன்கிழமை) அன்று புதுப்பள்ளியறை பூஜைகள் நடைபெற உள்ளன.அன்று இரவு 8 மணிக்கு கோவிலின் நடை சாத்தப்பட்ட பின்பு தங்கத்தால் ஆன சுவாமி வெள்ளிப் பல்லக்கில் வைக்கப்பட்டு சுவாமி வெள்ளி பல்லக்குடன் பிரகாரத்தை சுற்றி வரும். அதன் பின்பு அம்பாள் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்படும் புதுப்பள்ளியறைக்கு சுவாமி கொண்டு செல்லப்பட்டு தங்க ஊஞ்சலில் வைக்கப்பட்டு மகாதீப ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.சுவாமி புதுப்பள்ளியறைக்கு செல்வதற்காக கோவிலில் உள்ள பழமை வாய்ந்த வெள்ளி பல்லக்கு பாலீஷ் செய்யப்பட்டு பள பளப்பாகவும் புதுப்பொலிவுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வருடத்தில் ஒருநாள் மட்டுமே ராமேசுவரம் கோவிலில் சுவாமி வெள்ளிப் பல்லக்கில் புதுப்பள்ளியறைக்கு செல்வது சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியையொட்டி இன்று முழுவதும் ராமேஸ்வரம் கோவில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, கோவிந்தா... ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar