Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம்: செல்வ விநாயகர் கோவில் ... ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அமைச்சர் சாமிநாதன் வழிபாடு ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை கோவில் நிலத்தில் 1000 மரக்கன்றுகள் நடவு
எழுத்தின் அளவு:
சிவன்மலை கோவில் நிலத்தில் 1000 மரக்கன்றுகள் நடவு

பதிவு செய்த நாள்

26 அக்
2025
12:10

திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், அரியவகையை சேர்ந்த, 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.


வெற்றி அறக்கட்டளை, துளிகள் காங்கயம் சார்பில், ‘வனத்துக்குள் திருப்பூர் –11’வது திட்டத்தில், மரக்கன்று நடும் விழா நேற்று, சிவன்மலை அருகே நடந்தது. சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான, சென்னிமலை ரோட்டிலுள்ள 10.5 ஏக்கர் நிலத்தில், 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டன.


மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும், 40 அரிய வகை மரக்கன்றுகளில், 1,000 மரக்கன்றுகள் தேர்வு செய்து, நடப்பட்டுள்ளன.


கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில், போலீஸ் எஸ்.பி., கிரீஷ் அசோக் யாதவ், கூடுதல் எஸ்.பி., அர்ஹிதா ராஜ்புட், மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் போஜ், சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் செயல் அலுவலர் நந்தகுமார் முன்னிலையில், மரக்கன்றுகள் நடப்பட்டன.


விழாவில், வெற்றி மற்றும் துளிகள் காங்கயம் அமைப்பின் தன்னார்வலர்கள் திரளாக பங்கேற்றனர்.


கோவில் நிலத்தில், மரங்கள் பாதுகாப்பாக வளர ஏதுவாக, துளிகள் அமைப்பு சார்பில், சுற்றி லும் வேலி அமைத்து, ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசன வசதியும் செய்யப்பட்டிருந்தது.


‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar