Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்காரவேலவருக்கு ‘வியர்க்கும் ... திருச்செந்துார் கந்த சஷ்டி விழா; குவியும் பக்தர்கள்.. இன்று மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் திருச்செந்துார் கந்த சஷ்டி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

27 அக்
2025
10:10

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று, சூரசம்ஹார வைபவம் நடைபெறுகிறது.


திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இந்தாண்டு சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம், இன்று மாலை 6:00 மணிக்கு கோவில் கிழக்கு முகப்பில், விமரிசையாக நடைபெறுகிறது. திருப்போரூர் கிழக்கு மாடவீதி வரை விரட்டி சென்று கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகியோரை வீரபாகு வேடமணிந்த குழுவினர், சிறுவர்கள் வதம் செய்வர். கந்தபெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனை விரட்டிச் சென்று வதம் செய்வார். இதற்கான, ஏற்பாடுகள், கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளன. நேற்று, ஐந்தாம் நாள் உத்சவம் நடந்தது. இதில், காலை 9:00 மணிக்கு, கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், பல்லக்கு உத்சவத்தில் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் கந்த சுவாமிக்கு, லட்சார்ச்சனை விழா நடந்தது. இரவும், வெள்ளி அன்ன வாகனத்தில், சுவாமி வீதி உலா நடைபெற்றது. செய்யூர் செய்யூர் பஜார் பகுதியில், பழமை வாய்ந்த கந்தசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த ஆண்டு சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கந்த சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இதில் சஷ்டி விரதம் இருப்பவர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்து வந்தனர். சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று மாலை 4:30 மணிக்கு நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை இரவு திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இதேபோல, சித்தாமூர் அடுத்த பெருக்கரணையில் அமைந்துள்ள மரகத தண்டாயுதபாணி திருக்கோவில் மற்றும் காவனுார் முருகன் கோவில்களில், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar