வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் நாளை மாலை தேரோட்டம் நடக்கிறது. கடந்த ஆக.,2ல் கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. சவுந்தரவள்ளி தாயார் சன்னதியில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டம் நாளை மாலை 3 மணியளவில் நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தத்தால் சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ஊர் பிரமுகர்கள் அழைப்பை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் தேரில் எழுந்தருளுவார். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் ரத வீதிகள் வழியே நகரை வலம் வரும். தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ஓம் ஸ்ரீ ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.