பண்ருட்டி: கொக்குப்பாளையம் ஸ்ரீபிரத்யங்கரா தேவி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் யாகம் நடந்தது. பண்ருட்டி அடுத்த கொக்குப்பாளையம் ஸ்ரீபிரத்யங்கரா தேவி கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மாலை 5:00 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 7:00 மணியளவில் உலக நன்மை பெற வேண்டி அம்மனுக்கு மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு யாகம் துவங்கி 8:00 மணிவரை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.