Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்! கள்ளக்குறிச்சி அய்யப்பன் கோவில் மண்டலாபிஷேக  விழா! கள்ளக்குறிச்சி அய்யப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கோபுரங்களில் வளர்ந்த செடிகளை ’டப்போலா’ கலவை மூலம் அழிக்க நடவடிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
11:08

புதுச்சேரி : புதுச்சேரியில் மரம், செடிகளால் கோவில் கோபுரங்கள் சிதையாமல் பாதுகாக்க, முதல் முறையாக, மூலிகை மருந்துடன் கூடிய சிமென்ட் கலவை பூசும் பணி, வரதராஜப் பெருமாள் கோவிலில் துவங்கியுள்ளது. புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர், வரதராஜப் பெருமாள், மணக்குள விநாயகர் மற்றும் வில்லியனுாரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் ஆகிய கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த, புனரமைப்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில், காந்தி வீதி வரதராஜப் பெருமாள் மற்றும் வேதபுரீஸ்வரர் கோவில், ராஜ கோபுரங்களில் வளர்ந்துள்ள, செடி கொடிகளை, ’டப்போலா’ எனும், கலவையை பயன்படுத்தி நிரந்தரமாக அழிக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இப்பணியில், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மூலிகை கலவை பூசும் பணியை, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சத்தியமூர்த்தி, பொறியாளர்கள் நல்லாம்மணி, செல்வராஜ், கேப்டன் பிரதாபன், ஸ்பதி அழகுமுத்து ஆகியோர் பார்வையிட்டனர்.முருகானந்தம் குழுவினர், தமிழக அறநிலையத்துறையின் கீழ், கோவில் கோபுரங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.’டப்போலா’ என்பது 21 மூலிகைகளின் கலவை ஆகும்.கோவில் கோபுரத்தில் உள்ள செடிகளை அகற்றி, அந்த இடத்தில் இம்மருந்தினை, பூசும்போது, செடியின் வேர் முழுவதுமாக அழிந்து, மக்கி விடுகிறது. இதனால் மீண்டும் அப்பகுதியில் செடிகள் வளர்வது கிடையாது. பொறியாளர் முருகானந்தம் கூறுகையில், ’கடந்த 25 ஆண்டுகளாக தென் மாநிலங்களில் உள்ள 6000க்கும் அதிகமான, கோவில் கோபுரம், சுவர்களில் செடிகளை அகற்றி வருகிறேன். எங்கள் பணியை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. செடிகள் அழிக்கப்பட்டஇடத்தில் இந்த மருந்து பயன்படுத்திய பின்பு, அதே செடி மீண்டும் அங்கு வளர்வதில்லை’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar