சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ஆவணி திருவிழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2014 12:09
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். இங்கு ஆவணி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாத்தூர் தந்திரி சங்கரநாராயணரரு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கொடியேற்றினார். தெற்கு மடம் நித்திய காரிய லோகதானிகர் நீலகண்டரரு முன்னிலை வகித்தார். பத்து நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. திருவேங்கட விண்ணவருக்கும், பெருமாளுக்காகவும் நடத்தப்படும் விழாவாகும். 9-ம் நாள் விழாவில் இந்திரன் தேரில் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று தெய்வங்களையும் வைத்து ரதவீதியில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு மகாவிஷ்ணுவையும், அம்பாளையும் படுக்க வைத்த பள்ளியறை பூஜை நடக்கிறது. 10-ம் நாள் விழாவில் கோயில் தெப்பக்குளத்தில் ஆராட்டு நடக்கிறது.