சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான திட்டம் துவக்கப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2014 12:09
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதானதிட்டத்தை துவங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை நகரின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முருகன், மேற்கு முகமாக நோக்கி, தேவியருடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆண்டு முழுவதும் பக்தர்களின் சார்பில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்நிலையில் பக்தர்களின் நலன் கருதி, தமிழக அரசின் சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்க வேண்டும் என்று முருகபக்தர்கள் சார்பில், டாக்டர் முனுசாமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.