Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பாபா கோவிலில் 250 லிட்டர் ... சங்கு தீர்த்த குளத்தில் பாறைகள் அகற்றும் பணி துவக்கம்! சங்கு தீர்த்த குளத்தில் பாறைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடத்தப்பட்ட.. நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் தமிழகம் வந்தன!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2014
11:09

சென்னை : தமிழகத்தில் இருந்து, வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட, 12ம் நூற்றாண்டை சேர்ந்த, நடராஜர் மற்றும் அர்த்த நாரீஸ்வரர் சிலைகள், நேற்று, சென்னை வந்தன. கடந்த, 2002ம் ஆண்டு, அரியலூர் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் கிராமம், பிருகதீஸ்வரர் கோவிலில் இருந்த, நடராஜர் சிலை, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலை, மாயமாகின.

Default Image
Next News

சிலை கடத்தல் மன்னன், சுபாஷ் கபூர் மூலம், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திற்கு அந்த சிலைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. மத்திய, மாநில அரசுகள் மற்றும் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோரின் தொடர் முயற்சியின் விளைவாக, சமீபத்தில் டில்லி வந்திருந்த ஆஸி., பிரதமர் டோனி அபோட், அந்த சிலைகளை, பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத் தார். அவற்றை, தமிழகம் கொண்டு வர, டி.எஸ்.பி., அசோக் நடராஜ் தலைமையில் குழு, மூன்று நாட்களுக்கு முன்பு, டில்லி புறப்பட்டு சென்றது. டில்லியில் இருந்து, பெங்களூரு வழியாக, விமானம் மூலம், இரண்டு சிலைகளும், நேற்று காலை, 11:50 மணிக்கு, ’ஏர்இந்தியா’ விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சென்னை, கோட்டையில் உள்ள, இந்திய தொல்பொருள் துறை அலுவலகத்திற்கு, லாரியில் கொண்டு செல்லப்பட்டன. அங்கு, இரண்டு சிலைகளும், பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. வரும் 17ம் தேதி, அர்த்த நாரீஸ்வரர் சிலை, விருத்தாசலம் நீதிமன்றத்திலும், நடராஜர் சிலை, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்திலும், ஒப்படைக்கப்படும். அதன்பின், கடலூரில் உள்ள, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, சிலை பாதுகாப்பகத்தில், இரண்டு சிலைகளும், பாதுகாப்பாக வைக்கப்படும். இச்சிலைகள் இரண்டும், 12ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. இதன் பழம் பெருமையை சரியாக கணிக்க, ஓய்வு பெற்ற மத்திய தொல்பொருள் துறை அதிகாரி நாகசாமி அழைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சிலைகள், மாயமான சிலைகள்தான், என்பதை உறுதி செய்ய, மத்திய தொல்பொருள் துறை, மண்டல அலுவலகத்தில் இருந்து, அதிகாரிகள் ஓரிரு நாளில், வர உள்ளனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ்கபூர், வெளிநாட்டில் அருங்காட்சியகம் வைத்துள்ளார். அதில், இந்தியாவில் திருடு போன, நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன. அதேபோல், தமிழகத்தில் திருடு போன, கோவில் சிலைகள், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளன. அவற்றையும் தமிழகத்திற்கு, திரும்ப கொண்டு வர, நடவடிக்கை எடுத்து வருவதாக, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., பிரதீப் பிலீப் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை, கூடலழகர் கோவிலில் புரட்டாசி பௌர்ணமியை  முன்னிட்டு பாலாபிஷேக கட்டளை சார்பாக ... மேலும்
 
temple news
உஜ்ஜைன்; மத்தியப் பிரதேசம், உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயிலில் ஷரத் பூர்ணிமாவை முன்னிட்டு கீர் வைத்து, ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் இன்று வால்மீகி ஜெயந்தி விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கேரளா, பாலக்காடு, கல்பாத்தியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோயில் தேர்த் திருவிழா நவ., 07 ... மேலும்
 
temple news
சுசீந்திரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெற்ற நவராத்திரி விழாவிற்கு சென்றிருந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar