திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சிங்கனூர் லக்ஷ்மி நாராயண சீனிவாச பெருமாள் கோவிலில் 4 ம் ஆண்டு புரட்டாசி மகோற்சவம் வரும் 20 ம் தேதி துவங்குகிறது. முதல் சனிக்கிழமை திருவேங்கடமுடையான் திருக்கோலம், 27ம் தேதி சந்தனகாப்பு, அக்.,மாதம் 4 ம் தேதி வெண்ணெய்க்காப்பு, 11ம் தேதி புஷ்ப அலங்காரத்திலும் பெருமாள் அருள்பாலித்து சேவை சாதிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.