ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை உற்சவம் நடக்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு , அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் வீதியுலா நடக்கிறது. பக்தர்களின் வசதிக்காக மதுரை, சிவகாசி, விருதுநகர், சங்கரன்கோவில், உட்பட பல பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கூடுதல் தண்ணீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி., முரளீதரன் தலைமையில் 300க்கு அதிகமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.