பதிவு செய்த நாள்
20
செப்
2014
12:09
கும்பகோணம்: கும்பகோணம் அருகே, திருவலஞ்சுழியில், ஒரு கோடி ரூபாய் செலவில், ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு மையம் கட்டுமானப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பாடல் பெற்ற கோவில்கள், பரிகார கோயில்கள், நவக்கிரக கோவில்கள், சோழர் காலத்து கோவில்கள், இந்து சமய அறலையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளன.இந்த கோவில்களில் விலைமதிப்பில்லாத ஐம்பொன் சிலை, மரகத லிங்கம், செப்பு சிலை, உற்சவ மூர்த்தி, அரிய கற்சிலைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மகோத்சவ திருவிழாவின் போது, இந்த ஸ்வாமி சிலைகளை வீதி உலா விற்கும், சிறப்பு அலங்காரத் திற்கும் கொண்டு வரப்பட்டு, கோயில்களில் வைக்கப்படும்.போதிய பாதுகாப்பு இல்லாததால், கோவில்களில் வைக்கப்பட்ட பல சிலைகள் அவ்வப்போது திருட்டு போனது. சோழர் காலத்து நடராஜர் சிலைக ளுக்கு வெளிநாட்டில் அதிகம் மவுசு ஏற்பட்டதால், பல சிலைகள் திருடப்பட்டு, வெளி நாட்டினருக்கு விற்கப்பட்டது.
இதையடுத்து, கோவில் சிலைகளை பாதுகாக்க, இந்து சமய அறலையத் துறையின் தஞ்சை மண்டலம் சார்பில், திருவாரூரிலும், மயிலாடுதுறை மண்டலம் சார்பில் கும்பகோணத் திலும் ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப் பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசாரும், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மயிலாடு துறை மண்டலத்தில் கும்ப கோணம் அருகே திருவலஞ் சுழியிலும் புதிதாக, ஒரு கோடி ரூபாய் செலவில் ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது.
திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் இந்த பாதுகாப்பு மையத்தில், ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மேலும் சிலைகள் பாது காப்பாக வைக்க குளிரூட்டப் பட்ட அறைகள் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணிகள், தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இன்னும், நான்கு மாதங்களில் பணிகள் நிறைவடைந்து, ஐம்பொன் சிலைகள் பாதுகாப்பு மையம் செயல்பாட்டுக்கு வரும், என இந்து சமய அறலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.