பதிவு செய்த நாள்
10
அக்
2014
11:10
திருவள்ளூர்: திருவள்ளூர், யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவிலில், நேற்று, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, பூங்காநகரில், யோக ஞான தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், வியாழக்கிழமை தோறும், யோக ஞான தட்சிணாமூர்த்திக்கு, 108 லி ட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதையடுத்து நேற்று, காலை 9:30 மணிக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தட்சிணாமூர்த்திக்கு அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தன. இதில், திரு வள்ளூர், காக்களூர், பூங்கா நகரைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.