Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸவ விழா ... பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்  பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் திருக்கழுக்குன்றத்தில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
63 நாயன்மார்கள் கிரிவல உத்சவம் திருக்கழுக்குன்றத்தில் கோலாகலம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2026
06:04

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், வெள்ளி அதிகார நந்தி வாகன வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட சுவாமியை தரிசித்தவாறு, கோலாகல கிரிவலம் சென்றனர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று 63 நாயன்மார்கள், கோலாகலமாக உத்சவமாக கிரிவலம் சென்றனர்.


உத்சவத்தை முன்னிட்டு, காலை, வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமியர், கோவிலில், சிறப்பு அபிஷேகம் கண்டு, தீபாராதனை ஏற்றனர். அதைத்தொடர்ந்து, 4:00 மணிக்கு, வெள்ளி அதிகாரநந்தி வாகனத்தில் வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி அம்மன் சுவாமியர், அலங்கார சப்பரங்களில் 63 நாயன்மார்களுடன் வடக்கு ராஜகோபுரம் வழியா, வேதமலை கோவில் அடிவாரத்தை அடைந்தனர். அதன்பின் கிரிவல பாதையில் அணிவகுத்து, நாயன்மார்கள், வேதகிரீஸ்வரரை தரிசித்து, கோலாகலமாக கிரிவலம் சென்று, காலை 6:00 மணிக்கு, கோவிலை அடைந்தனர். பக்தர்கள் திரண்டு, கிரிவலம் சென்று, சுவாமியரை தரிசித்து வழிபட்டனர். நேற்று, சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவும் நடந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, உத்சவ அனுமதி குறித்து, தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டது. செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன், கோவில் நிர்வாகத்துடன் ஆலோசித்து, தேர்தலுக்கு இடையூறின்றி நடத்த அறிவுறுத்தினார். எனவே, வழக்கமாக காலை 8:00 மணிக்கு பிறேகே, கிரிவலம் துவங்கி, அப்பாதையில் பக்தர்கள் அர்ச்சித்து, மாலையில், சுவாமியர் கோவிலை அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar