Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகானுக்கு பிடித்த சினிமா பாட்டு! வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்றெழுத்தில் உங்கள் மூச்சிருக்கட்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2014
01:10

எப்போதும்நல்லவனாக இருக்க அக்கறை செலுத்துங்கள். காலப்போக்கில் உங்களின்முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அனைத்தும்மனதில் தான் இருக்கிறது. துõய்மை, துõய்மையின்மை என்னும் இரண்டும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.  மனதில் துõய்மைஇருக்குமானால், எண்ணும் எண்ணம், காணும் காட்சி, செய்யும் செயல் அனைத்திலும் அதன்பிரதிபலிப்பை காணமுடியும்.மூன்றெழுத்து மந்திரமான கடமையை மட்டும் செய்து கொண்டிருங்கள். அதே சமயம், ஆழ்மனதில் கடவுள் மீது அன்பு செலுத்துங்கள்.உலகின் நிலையாமையை உணர்ந்து விட்டால், கடவுளின் திருவடிகளில் சரணடைவது எளிய காரியம் தான்.பயப்பட வேண்டாம்! கலியுகத்தில், மனதால் செய்யும் பாவம் பாவமே ஆகாது. அதனை எண்ணிச் சிறிதும் வருந்த வேண்டாம்.ஈடுபடும் செயலில் வெற்றி பெறவேண்டுமானால், உடல் உழைப்பும்,விடாமுயற்சியும் மிக அடிப்படையானவை. உண்மையான பக்தி இருக்குமானால், புனிதப் பயணத்தால் ஏற்படும் பயனை விட அதிகமாகவே வீட்டில் இருந்தே கூட பெற முடியும்.ஆசை இருக்கும் வரை பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டேயிருக்கும். நுண்ணிய விதை போல இருக்கும் ஆசை பெரியஆலவிருட்சம் போல வளர்ந்து விடும் ஆற்றல் படைத்தது.மனிதன் தனக்குத் தேவையானதை தேடுவதில் அக்கறை காட்டுவதில்லை. குறுகிய புத்தியின் காரணமாக வேண்டாதவற்றை சிந்தித்துக் கொண்டிருக்கிறான். உலகிலுள்ள அனைவரும் ஆசைஎண்ணங்களைத் துறந்து விட்டால், இந்த உலகமே முடிவிற்கு வந்து விடும். கடவுளே தாயும், தந்தையுமாக இருந்து நம்மை வழி நடத்துகிறார். அவரைப் பிரார்த்திப்பவர்கள், தங்களுக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்துஎளிதாக விடுதலை அடைகின்றனர்.சாதிக்க முடியாததையும் சாதிக்கும் திறன்பக்திக்கு மட்டுமே இருக்கிறது என்ற உண்மையை அனுபவத்தின் வாயிலாக மட்டுமே உணர முடியும்.அன்பின்றி ஆண்டவனை அறியமுடியாது. பக்திக்கு அடிப்படைஉண்மையான அன்பு மட்டுமே. சந்தேகம், நம்பிக்கை இரண்டுமேமனதில் எழுகிறது. சந்தேகத்தை புறக்கணித்து விட்டு நம்பிக்கையில் உறுதி கொண்டு நில்லுங்கள். துõங்கிக் கொண்டிருக்கும் சோம்பலை விட்டு, சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். தோள்களை நிமிர்த்தி, அரிய செயல்களை வாழ்வில் சாதித்துக் காட்டுங்கள்.இரும்பு யுகமான இந்த கலியுகத்தில் சத்தியத்தைக் கடைபிடிப்பதேபெருந்தவம். அதைப் பின்பற்றினால் தெய்வீக நிலையை அடையலாம். குறுக்கிடும் பிரச்னைகளைக் கண்டு மலைக்க வேண்டாம். கடவுளின் திருநாமத்தைநம்பிக்கையோடு ஜெபித்தால் துன்பம்துõள் துõளாகி விடும். கடவுளுக்கு எவ்விதமானசடங்குகளோ, நைவேத்யமோபடைக்கத் தேவையில்லை.எல்லாமே நம் திருப்திக்காகத்தான். அவருடையதிருப்பெயர்களை இடைவிடாது உச்சரிப்பதே போதுமானது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar