ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் சேதம்: பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2026 12:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமென்ட் சிலாப்கள் சேதமடைந்து உடைந்து கிடப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். 2018ல் மத்திய சுற்றுலா நிதி மூலம் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக அக்னி தீர்த்த கடற்கரையில் நடைமேடையை புதுப்பித்து, கடற்கரையில் சிமென்ட் சிலாப்புகள் அமைத்தனர்.
ராட்சத அலையால் சிமென்ட் சிலாப்புகள் சேதமடைந்துள்ளன. இதனால் தீர்த்தத்தில் நீராடச் செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயமடைகின்றனர். பக்தர்கள் வசதிக்கு என்ற பெயரில் மத்திய அரசு நிதியை வீணடித்து தற்போது வரை உடைந்த சிலாப்களை சரி செய்யாமல் உள்ளதால் வயது மூத்த பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சிலாப்புகளை அகற்றி இயற்கையான கடற்கரை மணல் பரப்பை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.