ஊத்துக்கோட்டை : தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு, நேற்று, வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். இக்கோவில் வளாகத்தில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, தன் மனைவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நேற்று, வியாழக்கிழமை காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.