ஒரு பாதி ஆண், மற்றொரு பாதி பெண்ணுமாய் இருக்கும் வடிவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்பர். முருகப்பெருமானும் அர்த்தநாரீஸ்வர வடிவில் நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி கொல்லிமலை அடிவாரத்தில் கூவைமலையில் காட்சி தருகிறார். வலப்புறம் ஆணாகவும், இடப்புறம் பெண்ணாகவும் காட்சி தருவது இவரின் சிறப்பம்சம். தலையில் வேங்கைமலர் சூடி கொண்டையிட்டுள்ள இவர், ருத்ராட்சமாலையும், வீரதண்டையும், காலணியும் அணிந்திருக்கிறார். வலக்கையில் வஜ்ரவேலும், இடக்கையில் சேவலும் வைத்திருக்கிறார்.