Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலூர் மாரியம்மன் கோவில் ... திருப்புவனத்தில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை திருப்புவனத்தில் மழை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி மேளதாளத்துடன் கழுதைகளுக்கு திருமணம்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி மேளதாளத்துடன் கழுதைகளுக்கு திருமணம்

பதிவு செய்த நாள்

05 மே
2024
02:05

அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் செய்து வைத்தனர்.

கோவை மாவட்டம், அன்னூரின் வடக்கு பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் லக்கே பாளையம், கோவில் பாளையம், நாச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குளம், குட்டைகள் வறண்டு போயின. நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. மேய்ச்சலுக்கு கூட புற்கள் இல்லாமல் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தவிக்கின்றன. இதையடுத்து ஐந்து கிராம மக்கள் ஊர் கூட்டம் நடத்தினர். இதில் மழை பெய்ய வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி ஈரோடு மாவட்டம், நல்லூரில் இருந்து கழுதைகள் கொண்டு வரப்பட்டன. இதில் ஆண் கழுதை கோவில் பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து சீர்வரிசை உடன் லக்கேபாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டது. கழுதைகளுக்கு பட்டு வேட்டி, பட்டு சேலை, வளையல்கள் அணிவித்து, ரிப்பன் கட்டி, கவரிங் நகைகளால் அலங்கரிக்கப்பட்டன, பின்னர் மேளதாளம் வாசிக்க, கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பங்கேற்ற மக்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. பலரும் திருமணத்தில் மொய் பணம் எழுதினர். இதுகுறித்து ஊர் பெரியவர்கள் கூறுகையில், கடந்த 1987ல் ஒருமுறை கடும் வறட்சி ஏற்பட்டபோது இதே போல் திருமணம் செய்து வைத்தோம். மழை பெய்தது. 2019ல் திருமணம் செய்து வைத்தோம் அப்போதும் மழை பெய்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்த திருமணம் செய்து வைத்துள்ளோம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar