கஞ்சி கோனாம்பாளையம் அரங்கநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2024 03:05
கோவை ; சித்திரை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதியை முன்னிட்டு கோவை கஞ்சி கோனாம்பாளையம் அரங்கநாதர் கோவிலில் உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் அரங்கநாத சுவாமி காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாதரை தரிசனம் செய்தனர்.