Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் ... மெய்கண்டாருக்கு குருபூஜை! மெய்கண்டாருக்கு குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 அக்
2014
11:10

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரத்திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும், இவ்விழா கோவிலில், நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு இந்நிகழ்ச்சி நடந்தது. இதில், விரதம் இருக்கும் பக்தர்கள் திரளாக பங்கேற்று கையில் காப்பு கட்டிக்கொண்டனர். தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு பேரூர் ஆதீனம் கயிலை மாமுனிவர் தவத்திரு சாந்திலிங்க ராமசாமி அடிகள் சொற்பொழிவும் நடந்தது.

நேற்று துவங்கிய விழா வரும் 28ம் தேதி வரை முடிய தினசரி நான்கு கால அபிேஷக ஆராதனைகளும்; வரும் 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு வேல்வாங்கும் உற்சவமும்; 29ம் தேதி மாலை 3:00 மணிக்கு பேரூர் ஆதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகள் முன்னிலையில், சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கிழக்கு எஸ்.எஸ்., கோவில் விதி வழியாக சென்று சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பு பகுதியில், தாரகன் வதையும்; தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணன் வீதியும் சந்திப்பு பகுதியில் இரண்டாவது சூரன் சிங்கமுகன் வதையும், வெங்கட்ரமணன் வீதியும், ராஜாமில் ரோடும் சந்திப்பு பகுதியில், மூன்றாவது சூரன் பானுகோபன் வதையும் நடக்கிறது. பின், உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையம் பகுதியில், சூரபத்மன் வதை செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, 30ம் தேதி காலை 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 31ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தி நிகழ்ச்சியும் நடக்கிறது.

பக்தர்கள் விரதம்: சூரசம்ஹராத்திருவிழா துவங்கியதையடுத்து, பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் கடைப்பிடிக்க துவங்கியுள்ளனர். சம்ஹராத்திருவிழா நிறைவடைந்த பின், தண்டு, கனிகளை சாப்பிட்டு விரதம் முடிப்பர்.

வால்பாறை:வால்பாறையில் கந்தசஷ்டிவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வால்பாறை சுப்பிரமணியசுவாமி கோவிலில் இரண்டாம் ஆண்டு கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று காலை 7.00 மணிக்கு கணபதி ேஹாமம் நடத்தப்பட்டது. பின்னர் உற்சவருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடத்தப்பட்டது. காலை 9.50 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள கொடிகம்பத்திற்கு சிறப்பு அபிேஷக பூஜை செய்யப்பட்டது. அதன் பின்னர் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெரும் விழாவில் வரும் 29ம் தேதி மாலை 3.00 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா நடக்கிறது.வரும் 30ம் தேதி காலை 8.00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும், பகல் 12.00 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு முருகன் தேவியருடன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி திருவிழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
உடுமலை; திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே அமைந்துள்ள சுற்றுக்கோவிலில், புரட்டாசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar