Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக சதுர்த்தி: கோவில்களில் சிறப்பு ... ஆஞ்சநேயர் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்! ஆஞ்சநேயர் கோவிலுக்குள் புகுந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழங்குடியின அறுவடை திருவிழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2014
10:10

கூடலூர் : பழங்குடியின மக்களின், ’கதிர் அறுவடை திருவிழா’, கூடலூர் பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூரில், பனியர் இன பழங்குடி மக்கள், ’பூ பூத்தரி’ என்கிற ’கதிர் அறுவடை’ திருவிழாவை, பாரம் பரியமாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விழா, நம்பாலக்கோட்டை, வேட்டைகொருமகன் கோவிலில், நேற்று காலை துவங்கியது.

Default Image
Next News

சிறப்பு பூஜைகளுக்கு பின், கதிர் அறுவடைக்காக, பழங்குடியினர், கோவிலிலிருந்து புறப்பட்டு, புத்தூர்வயல் சென்றனர். அங்கு, வயலில் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, குல தெய்வத்துக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து, அவர்களின் பாரம்பரிய இசை முழங்க, கதிர் அறுவடை பணியில் ஈடுபட்டனர். அறுவடை செய்த நெற்கதிர்களை, ஒரே கட்டாக்கி தலையில் சுமந்து, வயல் பகுதியை மூன்று முறை சுற்றி வந்தனர். பின், பகவதி அம்மன் கோவில் திறந்த மண்டபத்துக்கு, நெற்கதிரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு, இறக்கி வைத்து பூஜை செய்தனர். அப்போது, பழங்குடியின பெண்கள், அங்கு பாரம்பரிய நடனம் ஆடினர். பூஜைக்கு பின், நெற்கதிரை மூன்றாக பிரித்து, ஒரு பகுதியை, மங்குழி பகவதி அம்மன் கோவிலுக்கும், ஒரு பகுதியை, ஸ்ரீ மதுரை விஷ்ணு கோவிலுக்கும் எடுத்து சென்றனர். மூன்றாவது கட்டை, நம்பாலக் கோட்டை வேட்டைகொருமகன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு, நெற்கதிருக்கு சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar